41 குழு சபாநாயகருடன் சந்திப்பு - sonakar.com

Post Top Ad

Monday, 18 April 2022

41 குழு சபாநாயகருடன் சந்திப்பு

 



அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்திருந்த 41 நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு சபாநாயகரை சந்தித்து உரையாடியுள்ளது.


தம்மை நாடாளுமன்றில் சுயாதீன குழுவாக அங்கீகரிக்கும் படி கோரியே இச்சந்திப்பு இடம்பெற்றதாக துமிந்த திசாநாயக்க விளக்கமளித்துள்ளார்.


இன்றைய தினம் மேலும் 17 பேருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் பதவி விலகும் நோக்கமில்லையென்பதை தெளிவு படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment