கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் உடலங்களை அடக்கம் செய்வதற்கான விதி முறைகளை வெளியிட்டுள்ளது சுகாதார அமைச்சு.
இதனடிப்படையில் உறவினர்கள் முன் கூட்டியே ஜனாஸாவைக் கொண்டு செல்வதற்கான பெட்டியை வழங்குவதோடு எழுத்து மூல ஒப்புதலும் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரணை தீவிலிலேயே அடக்கம் செய்யப்படும் அதேவேளை தினசரி காலை 5.30க்கு உடலங்களை அங்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் அடக்கத்தின் போது உறவினர்கள் இருவர் அங்கு பிரசன்னமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment