இலங்கையில் இன்றைய தினம் மேலும் ஐந்து கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 507 ஆக உயர்ந்துள்ளது.
கட்டாய எரிப்பு அரசாங்கத்தினால் கைவிடப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தற்சமயம் ஓட்டமாவடி பிரதேசத்தில் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.
இன்றைய தினம் ஒரு ஆண் மற்றும் நான்கு பெண்களின் மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவிக்கிறது. 2020 ஒக்டோபர் 4ம் திகதிக்கு முன்பாக மரண எண்ணிக்கை 12 ஆக இருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment