
இலங்கையில் மேலும் 16 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 1469 ஆக உயர்ந்துள்ளது.
இத்துடன் இன்றைய தினம் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளதுடன் இன்றைய தினம் இதுவரை ஒரே நாளில் அதிக தொற்றாளர் கண்டறியப்பட்ட தினமாகியுள்ளது.
இன்று கண்டறியப்பட்ட தொற்றாளர்களுள் 97 பேர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்பதோடு ஏனைய 53 பேர் கடற்படையினர் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இப்பின்னணியில் தொடர்ந்தும் 727 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment