விமான நிலையத்தை புகையடித்து துப்பரவு செய்ய நடவடிக்கை - sonakar.com

Post Top Ad

Sunday, 15 March 2020

விமான நிலையத்தை புகையடித்து துப்பரவு செய்ய நடவடிக்கை


கொரோனாவால் பாதிக்கப்பட்ட இத்தால், தென் கொரியாவிலிருந்து அதிகமானோர் இலங்கைக்கு வருகை தந்ததையடுத்து நாட்டில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.



இந்நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தை முழுமையாக இரசாயன புகையடித்து துப்பரவு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

விமான நிலைய ஊழியர்கள் அனைவரும் முகமூடி அணிவதற்கான கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள அதேவேளை, பல நாடுகளிலிருந்து விமானப் போக்குவரத்து இடை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment