மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஓட்டமாவடி கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கிடையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தமிழ் மொழி தினப் போட்டியில் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் ஓட்டமாவடி கோட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தெரிவித்தார்.
குறித்த போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றி தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், மாணவிகளை தயார்படுத்திய ஆசிரியர் ஜே.எம்.நியாஸ் மற்றும் ஆசிரியைகளான எம்.இந்திராணி,ஏ.எம்.றிஹானா, ஏ.ஜீ.சிபாயா ஆகியோர்களுக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன் என்று அதிபர் மேலும் தெரிவித்தார்.
-எச்.எம்.எம்.பர்ஸான்
No comments:
Post a Comment