
இலங்கையில் இன்று (16) மாத்திரம் 10 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
ஏலவே கண்காணிப்பு மையத்தில் இருந்தவர்கள் போக, கேரளாவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் இந்தியா, சீனா போன்ற நாடுகள் குறித்து இலங்கை தொடர்ந்தும் மௌனம் காக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment