முல்லைத்தீவு, நீராவியடி பிள்ளையார் கோயில் வளாகத்துக்குள் நீதிமன்ற உத்தரவையும் மீறி பிக்குவின் உடலை எரித்து அங்கு களேபரத்தை உருவாக்கிய பொது பல சேனா பயங்கரவாதி ஞானசாரவுக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சட்டத்தரணிகளால் தொடுக்கப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணியிலேயே இவ்வழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அன்றைய தினமே தமக்கு நீதிமன்ற உத்தரவு கிடைக்காததனாலேயே உடலை அங்கு தகனம் செய்ததாக ஞானசார குழு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment