மாவனல்லை இளைஞர்களைத் தேடி பலாங்கொடயில் தேடுதல் வேட்டை! - sonakar.com

Post Top Ad

Thursday 24 January 2019

மாவனல்லை இளைஞர்களைத் தேடி பலாங்கொடயில் தேடுதல் வேட்டை!


மாவனல்லை பகுதியில் புத்தர் சிலைகளை உடைத்துச் சேதப்படுத்திய விவகாரத்தில் தொடர்ந்தும் தலைமறைவாக இருக்கும் இருவர் பலாங்கொட பகுதியில் மறைந்திருப்பதாகக் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு தேடல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.



இதற்கிடையில் குறித்த நபர்களின் தந்தையான இப்ராஹிம் மௌலவி தற்போது பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவ்விருவரும் தொடர்ந்தும் தலைமறைவாகவுள்ள நிலையில் புத்தளம் பகுதியில் ஒளிந்திருப்பதாகக் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு நடாத்தப்பட்ட சுற்றி வளைப்பில் ஆயுதங்கள் சகிதம் நால்வர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment