யாழில் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது - sonakar.com

Post Top Ad

Thursday 24 January 2019

யாழில் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது


யாழ் நகரப் பகுதிகளில்  அண்மைக் காலமாக இடம்பெற்று வந்த  திருட்டுக்களுடன்  சம்மந்தப்பட்டதாக இருவர்  சந்தேகத்தில் யாழ்ப்பாணம்  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக குடாநாட்டின் பல இடங்களிலும் அண்மைய நாட்களில் வழிப்பறி மற்றும்  நகைத் திருட்டுக்களும் இடம்பெற்று வந்தன. இச் சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பபு பிரிவினர் தீவிர  விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்த நிலையில் குறித்த கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய  ஒருவர் உட்பட கொள்ளையடிக்கும் நகைகளை உருக்கிக் கொடுக்கின்ற மற்றுமொருவருமாக இரண்டு நபர்கள் இன்று(24) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைதாவர்களிடம் இருந்து  ஒரு தொகுதி தங்கப்பவுண் நகை  ஒரு மோட்டார் சைக்கிள் ஒன்றும் மிட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட நகைகள்  சுமார் பத்து இலட்சம் ருபா பெறுமதியானவை என  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி  நகைத் திருட்டுக்கள் தொடர்பில் விசாரணையை  யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி எம்.இமானுவேல் தலைமையிலான பதில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி திசாநாயக்க , தினேஸ் கருணாநாயக்க, சமுத்திரஜீவ, சூரியகுமார், ஆர்.ரஞ்சித், சேனாரத்ன, சி.குமார, ஹேரத், பிரபாத், தினேஸ்கரன் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர்   மேற்கொண்டிருந்தனர்.

தற்போது   கொள்ளைகள் மீட்கப்பட்ட   நகைகள்  தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார்   முன்னெடுத்து வருகின்றனர்.இதே வேளை சைந்தேகத்தில் கைதான  குறித்த நபர் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளதால் அவருக்கு போதைப் பொருளை பெற்றுக் கொள்வதற்கு பணம் தேவைபடுவதாலேயே இவ்வாறு நகைக் கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment