புதிய பிக்கு மீது வயர், பெல்டால் அடித்து தாக்குதல்! - sonakar.com

Post Top Ad

Wednesday 23 January 2019

புதிய பிக்கு மீது வயர், பெல்டால் அடித்து தாக்குதல்!


அஹுங்கல, கெகிரிவத்த விகாரையொன்றில் புதிதாக சேர்ந்த பௌத்த துறவியொருவர் அங்குள்ள மூத்த துறவியொருவரால் வயர், பெல்ட் கொண்டு சராமரியாகத் தாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.



பொது மக்கள் 119 ஊடாக அறிவித்ததன் பின்னணியில் பொலிசார் வந்த போதும், குறித்த துறவிக்கெதிராக நடவடிக்கையெடுப்பதைத் தவிர்த்துள்ளதோடு விசாரணை நடாத்துவதையும் கைவிட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஏனைய சிரேஷ்ட துறவிகளின் அழுத்தத்தின் காரணமாகவே பொலிசார் நடவடிக்கை எடுக்காதிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment