சுதந்திர தினத்தில் எதிர்பார்க்கப்படும் ஞானசாரவின் விடுதலை! - sonakar.com

Post Top Ad

Saturday 19 January 2019

சுதந்திர தினத்தில் எதிர்பார்க்கப்படும் ஞானசாரவின் விடுதலை!


எதிர்வரும் சுதந்திர தினத்தன்று ஞானசாரவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் எனும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ஞானசார, வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு பொது மன்னிப்பைப் பெற்றுக்கொடுக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பெப்ரவரி 4ம் திகதியளவில் ஞானசார விடுவிக்கப்படுவார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர் துமிந்த திசாநாயக்கவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளதையடுத்து இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment