அரபுக் கல்­லூ­ரி விவகாரம்; பிழையான கருத்து பரவுகிறது: ஹலீம் - sonakar.com

Post Top Ad

Sunday 27 January 2019

அரபுக் கல்­லூ­ரி விவகாரம்; பிழையான கருத்து பரவுகிறது: ஹலீம்


அரபுக் கல்­லூ­ரிகள் தொடர்பில் நான் எடுத்­துள்ள தீர்­மா­னங்கள் குறித்து தவ­றான கருத்­துகள் பரப்­பப்­பட்டு வரு­கின்­றன. அண்­மைக்­கால சம்­ப­வங்­களைத் தொடர்பு படுத்தி எவரும் அச்சம் கொள்­ளத்­தே­வை­யில்லை. எனது தீர்­மானம் எந்தத் தரப்­பி­னதும் அழுத்­தங்­க­ளுக்கு உட்­பட்­ட­தா­ன­தல்ல. அர­புக்­கல்­லூ­ரி­களை தர­மு­யர்த்தி எமது மாண­வர்­களின் கல்­வித்­த­ரத்தை மேம்­ப­டுத்­து­வதே எனது இலக்­காகும் என அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் தெரி­வித்தார்.

அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் அரபுக் கல்­லூ­ரிகள் தொடர்பில் மேற்­கொண்­டுள்ள தீர்­மா­னங்கள் தொடர்பில் கருத்துத் தெரி­விக்­கை­யிலே இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில்; அரபுக் கல்­லூ­ரிகள் புதி­தாக உரு­வாக்­கப்­பட்­ட­தென்றால் கட்­டா­ய­மாக வக்பு சபையின் கீழ் பதி­வு­செய்­ய­வேண்டும். பழைய அரபுக் கல்­லூ­ரிகள் என்றால் சுய விருப்­பத்தின் கீழ் வக்­பு­சபை யில் பதிவு செய்து கொள்­ளலாம். அரபுக் கல்­லூ­ரிகள் வக்பு சபையில் பதிவு செய்­யப்­ப­டாது விட்டால் அவை கல்­வி­ அ­மைச்சின் கண்­கா­ணிப்பின் கீழ் வரு­வ­தற்கு சாத்­தியம் உள்­ளது. அரபுக் கல்­லூ­ரிகள் வக்­பு­ச­பையின் கண்­கா­ணிப்பில் இருப்­பதே எமக்கு நன்மை பயக்கும்.


பள்­ளி­வா­சல்கள் வக்­பு­ச­பையின் கீழ் பதிவு செய்­யப்­ப­டு­வது போன்று அரபுக் கல்­லூ­ரி­களும் பதி­வு­செய்­யப்­பட வேண்டும். இவ்­வாறு பதிவு செய்­யப்­பட்­டாலே பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அர­சாங்கம் வழங்கும் சலு­கைகள் மற்றும் உத­வி­களை அர­புக்­கல்­லூ­ரி­க­ளுக்கும் பெற்­றுக்­கொ­டுக்க முடியும்.

தற்­போது அரபுக் கல்­லு­ரிகள் முஸ்லிம் சமய, பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்டு சான்­றிதழ் ஒன்று மாத்­தி­ரமே வழங்­கப்­ப­டு­கின்­றது. இளைஞர்களது எதிர்­காலம் அர­புக்­கல்­லூ­ரி­க­ளிலே தங்­கி­யி­ருக்­கி­றது. சில அரபுக் கல்­லூ­ரிகள் பல்­வேறு துறை­களில் மாண­வர்­களைப் பயிற்­று­விப்­பது வர­வேற்­கத்­தக்­க­தாகும்.

அர­புக்­கல்­லூ­ரிகள் தொடர்­பான தீர்­மா­னங்கள் உல­மாக்­களின் ஆலோ­ச­னை­களைப் பெற்­றுக்­கொண்டே மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. சமூகம் சார்ந்த தீர்­மா­னங்கள் உலமாக்களின் ஆலோ­ச­னை­க­ளின்­ப­டியே முன்­வைக்­கப்­படும். அர­புக்­கல்­லூ­ரி­களைச் சீர்­தி­ருத்தி தர­மு­யர்த்தி மாண­வர்­களின் கல்­வித்­த­ரத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­களே மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. மாறாக அரபுக் கல்­லூ­ரியின் வளர்ச்­சியைக் தடை­செய்ய வேண்­டு­மென்­ப­தல்ல. அஹதிய்யா பாடசாலைகளுக்கு அரசாங்கம் உதவிகளைச் செய்துள்ளது. அந்த அடிப்படையில் அரசாங்கத்தின் செலவில் 12 பாடப்புத்தகங்கள் மூன்று மொழிகளில் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான உதவிகளை அரபுக்கல்லூரி களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பதே எனது இலக்காகும் என்றார்.

-Razy Hashim

No comments:

Post a Comment